Tuesday 19 August 2014

பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது


பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம்.
01. அருள் வளம் பொருந்திய பூமி:
பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது.
“அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71)
இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது.

இதற்குப் பின்னரும் இஸ்ரேல் ஈரானைத் தாக்குமா ? நட்பு நாடாயிற்றே !! இஸ்ரேலின் நட்பு நாடு அமெரிக்காவினதும் நட்பு நாடுதானே !

30 வருடங்களாக : தாக்குவோம்…தாக்குவோம்…ஆனால் இதுவரை இல்லை?


ஆச்சரியமான ஒரு விடயம் …. அமெரிக்காவும், இஸ்ரேலும் பல வருடங்களாக ஈரானை அச்சுறுத்தி வருகின்றன. தாக்குவதாக சூளுரைக்கின்றன. வெகுவிரைவில் யுத்தம் தொடங்கும் என நினைக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன… ஆனால் இன்றுவரை…ஒரு யுத்தமும் நடைபெறவில்லை..இராக்கை, ஆப்கானிஸ்தானை, வியட்நாமை ..தாக்கிய அமெரிக்கா ஏன் ஈரானை பயமுறுத்துவதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்கிறது? வெகுவிரைவில் தாக்குவோம்..என அடிக்கடி கூறும் இஸ்ரேல் ஏன் எச்சரிக்கையுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்கிறது?
காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே வாசியுங்கள் :

Islamic movie

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயண வரலாறு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் இறை இல்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஜம்ஜம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது.

Monday 18 August 2014

முஸ்லிம்கள் மறந்த புனித மஸ்ஜிதுல் அக்ஸா – மறைக்கப்படும் உண்மை வரலாறு

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 17:01) 

அதிக நன்மைகளை நாடி பிரயாணம் மேற்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கிய உலகின் சிறப்பு மிக்க மூன்று புனிதத் தளங்களில் ஒன்றாக பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா காணப்படுகின்றது. (அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி),  நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996 

Saturday 26 July 2014

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. (The night of power is better than a thousand months)

▓▓ லைலத்துல் கத்ரு இரவு ▓▓

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
அல்குர்ஆன் 97:1-3

இந்த மகத்துவமிக்க இரவு இது தான் என்று வரையறுத்து, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.
லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2017, 2020

Friday 25 July 2014

கட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம்.
நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும். அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503 இந்த ஹதீஸில் ஃபரள (கடமையாக்கினார்கள்) என்ற வாசகம் தெவாக இடம் பெற்றுள்ளதால் இது ஒரு கட்டாயமான கடமை என்பதை அறிந்து கொள்ளலாம்.

Saturday 12 July 2014

யூதர்கள் என்றால் யார்?

யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத்தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான். இதை எதைக் காட்டுகிறது. எனின் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.
 
யூதர்களின் தன்மைகள், அவர்களின் சிந்தனைகள், அவர்களின் இலக்குகள், அவர்கள் தெரிவு செய்யும் பாதைகள், அவர்கள் குறி வைத்துத் தாக்கும் இலக்குகள் போன்றவைகளை முஸ்லிம்கள் தேடித்தேடிக் கற்றுக் கொள்வதோடு அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகள் பற்றிய அறிவையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.